கொரோனா வைரஸ்: “நீங்கள் தூக்கி எறியும் மாஸ்க், ஒரு திமிங்கலத்தையே கொல்லும்”
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் பெருமளவு குறைந்திருக்கலாம். ஆனால், கடலில் கழிவுகள் கலப்பது மட்டும் குறைந்தபாடில்லை.
கடலில் இதுவரை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது உலகமெங்கும் முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்டவை கடலில் அதிகம் காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
Source: BBC.com