வட கொரியாவில் முதல் கொரோனா நோயாளி: இதுவரை அங்கு தொற்றே இல்லையா?
இது நாள் வரை தங்கள் நாட்டில் கொரோனா நோய்த் தொற்றே இல்லை என்று கூறிவந்த வட கொரியா தற்போது முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு அண்டை நாடான தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்ற வட கொரியர் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு நாடு திரும்பியபோது அவரிடம் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவாக இந்தக் காணொளியில்…
Source: BBC.com