சுவீடனில் எரிக்கப்பட்ட குரான்: போராட்டம் கலவரமாக மாறியது
சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டன, கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று போலீஸார் கூறுகின்றனர்.
Source: BBC.com