சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம் – பின்னணி என்ன?
சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்பட அந்நாட்டின் முக்கிய பதவிகள் வகித்து வந்த பலரும் தங்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஏமனில் சண்டையிட்டு வரும் சௌதி தலைமையிலான கூட்டுப் படைகளின் கமாண்டராக இருந்த இளவரசர் ஃபகாத் பின் துர்க்கி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: BBC.com