ஐ.நாவில் பாகிஸ்தானுக்கு எதிராக குற்றப்பட்டியல் வாசித்த இந்திய வெளியுறவு அதிகாரி
ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 45ஆவது கூட்டத்தில் பாகிஸ்தானின் இந்தியா விரோத செயல்பாடுகளை பட்டியலிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான செந்தில்குமார்.
கடந்த 14ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை மனித உரிமைகள் கவுன்சில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய மனித உரிமைகள், அரசியல் சூழ்நிலைகள், பொருளாதாரம், கலாசார உரிமைகள், வியன்னா பிரகடனத்தின் அமலாக்கம், நிற, இன பாகுபாடு, சகிப்புத்தன்மையற்ற நிலையை ஒழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து உறுப்பு நாடுகள் விவாதித்து வருகின்றன.
Source: BBC.com