எவர்கிவனை மீட்க உதவிய கடல் அலைகள்; இயல்பு நிலைக்கு திரும்பும் சூயஸ் கால்வாய்
உலகளாவிய வர்த்தகத்தில், பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான சரக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக தொடரும் இந்த கப்பல் வாணிபம், கடந்த வாரம் தொடங்கி திங்கட்கிழமை வரை (மார்ச் 29) ஒருவித தடங்கலை எதிர்கொண்டது.
சூயஸ் கால்வாயின் நடுவில் சிக்கிய 400 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்ட ‘எவர்கிவன்’ கப்பலை மீண்டும் மிதக்கச்செய்யும் முயற்சி ஒரு வார போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது.
Source: BBC.com