Press "Enter" to skip to content

சீனாவில் பெருவெள்ளம்: சாலையில் குப்பையாய் குவிந்து கிடக்கும் கார்கள் – ‘பருவநிலை மாற்றம் காரணம்’

பட மூலாதாரம், NOEL CELIS/AFP via Getty Images

சீனாவின் க்ஹெனான் மாகாணம் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.

அந்த மாகாணத்தின் ஜெங்ஜோ நகரில் மூன்று வருடங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாளில் கொட்டி தீர்த்ததில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீன வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் இறந்தனர்.

தொடர் வண்டிபெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தொடர் வண்டிபேட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தை பயணிகள் தவிர்க்க முயல்வதும் அந்தக் காணொளிகளில் பதிவாகியுள்ளன.

 தொடர் வண்டிபெட்டிக்குள் நீர்

தொடர் வண்டிபெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் உள்ளே இருப்பவர்கள் நீரில் மூழ்கி இறந்து போக நேரலாம் என்ற அச்சமும் நிலவியது.

பல மணி நேர பதற்றம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் மீட்புதவிப் பணியாளர்கள் தொடர் வண்டிபெட்டியின் மேல்புறத்தை உடைத்து உள்ளே சிக்கியிருந்த சுமார் 500 பயணிகளை மீட்டனர்.

சீன வெள்ளம்

பட மூலாதாரம், Reuters

சீன வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் இது பொதுவாக மழைக்காலம். இருப்பினும் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதல் பிரச்னையால் நிலைமை மிக மோசமாகியுள்ளதாக சீனாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீன வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

எதிர்காலத்தில் வானிலை மிக தீவிரமாகலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சீன வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய சாலைகள் கார்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளால் நிறைந்து வழிகின்றன.

சீன வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »