Press "Enter" to skip to content

தாலிபன் ஆளுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி காவலர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில் இருக்கும் கோர் மாகாண தலைநகரான ஃபிரோஸ்கோவில், பானுவின் உறவினர்கள் முன்னிலையில் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பானு நெகரின் மரணத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பிபிசியிடம் தாலிபன்கள் கூறியுள்ளனர். மேலும் அவரின் மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

“எங்களுக்கு அந்த சம்பவம் குறித்து தெரியும். தாலிபன்கள் அவரை கொலை செய்யவில்லை என்பதை நான் உறுதி செய்கிறேன். நாங்கள் அச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்” என தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

இது தொடர்பான முழு விவரத்தை இந்த காணொளியில் பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »