லித்துவேனியா நாட்டில் ஒரு நபரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான ஆணி, நெட், போல்டுகள், கத்திகள் அகற்றப்பட்டுள்ளன என்று மருத்துவர்கள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நபர் குடிப்பழக்கத்தை விட்ட பிறகு ஒரு மாதமாக உலோகப் பொருள்களை விழுங்கிக் கொண்டிருந்தார் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கிளைபேடா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் அந்த நபர் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட உலோகப் பொருள்களில் சில 10 சென்டி மீட்டர் நீளமுள்ளவை என்கிறது லித்துவேனியா நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான எல்.ஆர்.டி.
இது மிகவும் வித்தியாசமான கேஸ் என்று அறுவை சிகிச்சை வல்லுநர் சருனாஸ் டைலிடெனாஸ் கூறியுள்ளார்.
கடுமையான வயிற்று வலியோடு இருந்த இந்த நபர் பால்டிக் கடற்கரையோரம் உள்ள இந்த மருத்துவமனைக்கு உதவூர்தி மூலம் கொண்டுவரப்பட்டார்.
தற்போது நோயாளியின் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com