பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்: 20 பேர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்பதும் தெரியவந்திருக்கிறது.
பலுசிஸ்தானின் ஹர்னய் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 அளவாகப் பதிவாகி இருக்கிறது.
குவெட்டா நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹர்னயில், ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com