ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தைவானை சுற்றி போர் ஒத்திகையை தொடங்கிய சீனா
தைவானை சுற்றி நேரடியான போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது. நேற்று பிற்பகல் தைவானின் கிழக்கு கடற்பரப்பை நோக்கி சீன பல்வேறு ஏவுகணைகளை ஏவியது.
அனைத்து ஏவுகணைகளும் இலக்குகளை குறி வைத்து தாக்கின. தைவானை சுற்றி வான்மற்றும் கடற் பரப்புகளில் போர் ஒத்திகைகள் நடைபெறுகின்றன.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்த பிறகே சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதன் சமீபத்திய நடவடிக்கையாக நான்சி பெலோசி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தடைவிதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com