Press "Enter" to skip to content

“வேலை செஞ்சது போதும், வீட்டுக்கு போங்க” – இப்படியும் ஒரு நிறுவனமா?

பட மூலாதாரம், TANVI KHANDELWAL

21 வயது தான்வி கண்டேல்வால் தனது அலுவலக கணினியிலிருந்து ஒரு ‘பாப் பப்’ எச்சரிக்கை வந்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்.

“உங்களின் பணி நேரம் முடிந்துவிட்டது. அலுவலக கணினி 10 நிமிடங்களில் ஷட் டவுன் ஆகிவிடும். தயவு செய்து வீட்டிற்கு செல்லுங்கள்!” என்று அந்த ‘பாப் பப்’ செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சில தினங்களுக்கு முன்புதான் மனித ஆற்றல் துறை பிரிவில் தான்வி அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தார். அந்த ‘பாப் பப்’ செய்தி தனது புதிய நிறுவன பணியாளர்களால் இன்கடை செய்யப்பட்டது என்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடு என்றும் அவர் தெரிந்து கொண்டார்.

அந்த நிறுவனத்தின் பெயர் சாஃப்ட்க்ரிட் 40 ஊழியர்களை கொண்ட அந்த நிறுவனம் ஒரு டெக் புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்). மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ளது.

இங்கு ஊழியர்கள் பணி நேரம் முடிவடைய 10 நிமிடங்கள் இருப்பதற்கு முன்னதாக இம்மாதிரியான பாப் பப் செய்தி நோட்டிஃபிகேஷனை பார்ப்பார்கள். அதன்பிறகு 7 மணிக்கு கணினி சரியாக ஷட் டவுன் ஆகிவிடும்.

இது குறித்து பேசிய நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் ஸ்வேதா ஷுக்லா, இந்த எச்சரிக்கை செய்தி, தங்களின் ஊழியர்கள் சரியான முறையில் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது என்று தெரிவிக்கிறார்.

“கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் அனைவரும் அதிக நேரம் பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரம் குறைய தொடங்கியது. என்னால் எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை”

“இந்த நிறுவனத்தின் பிற நிறுவனர்களும் அதே சூழலை எதிர்கொண்டனர்,” என்கிறார் அவர்.

இதனால் அவர்கள் தங்களின் ஊழியர்களின் கணினியில் எச்சரிக்கை செய்தி ஒன்று பாப் பப் ஆகி பத்து நிமிடத்தில் கணினி ஷட் டவுன் ஆகும் படியான மென்பொருளை கண்டறிய ஊழியர் ஒருவரிடம் கோரினர்.

இந்த மென்பொருள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக அனைத்து ஊழியர்களின் கணினியிலும் பொருத்தப்பட்டது.

“இதை ஒரு வார இறுதி நாளில் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். முதன்முதலில் பாப் பப் செய்தி தோன்றியவுடன் அனைவரும் இது ஏதோ ஒரு விளையாட்டு என நினைத்தனர். சிலர் கணினிகளை யாரோ மின்ஊடுருவல் செய்துவிட்டனர் என்று நினைத்தனர்” என்கிறார் ஸ்வேதா ஷுக்லா.

அதேபோல அந்த எச்சரிக்கை செய்தியை மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் சுவாரஸ்யமாக இருக்காது என்பதால் பாப் பப் வழியை தேர்ந்தெடுத்ததாகவும் ஸ்வேதா ஷுக்லா தெரிவித்தார்.

தான்விக்கு இது ஒரு புதிய அனுபவம் ஏனென்றால் இதற்கு முன்னதாக பணியாற்றிய நிறுவனத்தில் சரியான நேரத்தில் கிளம்புவது என்பது இயலான காரியம். அங்கு அதிக நேரங்கள் பணி செய்ய கோரப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பாப்-பப் செய்தி குறித்து லிங்கடினில் பகிர்ந்து, இம்மாதிரியான ஒரு நிறுவனத்தில் நீங்கள் பணி செய்யும்போது உங்களுக்கு திங்களுக்கான உத்வேகங்களோ அல்லது வெள்ளிக்கிழமை கேளிக்கைகளோ தேவையில்லை” என்று தெரிவித்திருந்தார். மிகுதியாக பகிரப்பட்ட இந்த போஸ்ட்டிற்கு 4 லட்சம் லைக்குகளும் 7 ஆயிரம் கமென்டுகளும் கிடைத்தன.

பலர் இந்த நடைமுறை குறித்து பாராட்டியிருந்தாலும், சிலர் இந்த நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

“இந்த செயல்முறை குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது,” என ஒரு பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

தங்களுக்கேற்ற நேரத்தில் பணியாளர்கள் பணியை முடித்துகொள்ளும் சுதந்திரம் இதில் கேள்விக்குறி ஆகிறது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு புறம் குறிப்பிட்ட நேரத்தில் தனது பணியை முடிக்கவில்லை எனில் என்னாவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் மீண்டும் கணினியை ரீதுவக்கம் செய்து கொள்ளலாம் என்று அதற்கு பதலளிக்கிறார் ஸ்வேதா ஷுக்லா.

இந்த முயற்சி அவர்களின் ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்ற ஒரு செய்தி மட்டுமே தவிர வேற ஒன்றும் இல்லை என்கிறார் ஷுக்லா.

ஆனால் எங்களின் க்ளைண்ட்கள் சிலருக்கு இந்த முறையில் மகிழ்ச்சி இல்லை. இருப்பினும் நாங்கள் இதை தொடருகிறோம் என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »