5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசை வலியுறுத்தி வரும் நிலையில் சற்று முன்னர் தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள சுற்றறிக்கை ஒன்றால் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இந்த சுற்றறிக்கையில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலைப்பளு மற்றும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த சுற்றறிக்கையை அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது
The post 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி: இன்று வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes