Press "Enter" to skip to content

பியர் கிரில்ஸ் ரஜினிக்காக மட்டும் மைசூர் காட்டுக்கு வரல கண்ணா

Samayam Tamil | Updated:

ரஜினி மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அவரின் ரசிகர்கள் பெருமையாக பேசிய நேரத்தில் இப்படி நடந்துவிட்டதே.

ரஜினி

image

பியர் கிரில்ஸ் நடத்தி வரும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை அடுத்து கலந்து கொண்ட இந்தியர் எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தான் என்று ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களோ சிங்கம் காட்டுக்குப் போச்சு, முள் குத்திச்சு, திரும்பி வந்துடுச்சு என்று கிண்டல் செய்கிறார்கள். மேன் வெர்சஸ் வைல்டு ரஜினி மீம்ஸ் என்று ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர்.

அக்ஷய் குமார்

image

மோடிக்கு அப்புறம் ரஜினி தான் என்று அவரின் ரசிகர்கள் கூறிய நேரம் அந்த நிகழ்ச்சியில் அடுத்ததாக அக்ஷய் குமார் கலந்து கொண்டுள்ளார். ஆம், 2.0 படத்தில் வில்லனாக நடித்த அதே பாலிவுட் நடிகர் தான். ரஜினி மட்டும் அல்ல அக்ஷ்ய குமாரும், நரேந்திர மோடியும் கூட ரொம்ப நெருக்கமானவர்கள். அது தெரியாமல் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியை நினைத்து ரொம்ப பெருமைப்பட வேண்டாம் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

மைசூர்

image

ரஜினி கிளம்பிய கையோடு பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அக்ஷய் குமார் மைசூருக்கு வந்துள்ளார். அக்ஷய் குமார் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மைசூர் சென்றதை பார்த்த பாலிவுட் ரசிகர்களோ வெளிநாட்டுக்காரரும், வெளிநாட்டுக்காரரும் சேர்ந்து ஷூட் செய்யப் போகிறார்கள் என்று கலாய்த்துள்ளனர். அக்கி கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பதால் நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவரை வெளிநாட்டவர் என்று விளாசுகிறார்கள்.

வருமான வரித்துறை

image

ரஜினி பியர் கிரில்ஸ் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கை முடித்த பிறகே சென்னை திரும்பியுள்ளார். ஆனால் அவர் முள் குத்தியதால் பாதியில் வந்துவிட்டதாக கலாய்க்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் மீது வருமான வரித்துறை தொடர்ந்த 3 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் ஏன் வாபஸ் பெறப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Web Title after rajinikanth, akshay kumar shoots for man vs wild with bear grylls

(Tamil News from Samayam Tamil , TIL Network)

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »