சமீபத்தில் செங்கல்பட்டு டோல்கேட்டில் டிரைவர் மற்றும் டோல்கேட் ஊழியர் ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த பிரச்சனை அடிதடியாக மாறியதை அடுத்து டிரைவர் பேருந்தை டோல்கேட்டில் குறுக்கே நிறுத்தி போராட்டம் செய்தார். இதனை அடுத்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் வன்முறையில் இறங்கி டோல்கேட்டை அடித்து நொறுக்கினார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வரும்போது டோல்கேட்டில் இருந்த ரூபாய் 18 லட்ச ரூபாய் பணம் வன்முறையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தற்போது சிசிடிவி கேமரா மூலம் அந்த பணத்தை கொள்ளையடித்தது டோல்கேட் ஊழியர்களே என்பது தெரிய வந்துள்ளது. டோல்கேட் ஊழியர்களே கொள்ளை அடித்துவிட்டு பொதுமக்கள் கொள்ளை அடித்ததாக நாடகமாடியது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
The post செங்கல்பட்டு டோல்கேட் வன்முறை: ஊழியர்களே பணத்தை கொள்ளையடித்து விட்டு பொதுமக்கள் மீது பழியா? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes