Samayam Tamil | Updated:
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் குறித்து வெளியான தகவலை அறிந்தவர்கள் இப்படித் தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
சூர்யா
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்பதும், அது சிங்கம் படத்தின் தொடர்ச்சி இல்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். ஹரி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஹீரோயின் வேறு ஒரு நடிகை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்மிகா மந்தனா
சூர்யாவுடன் நடிக்குமாறு ரஷ்மிகா மந்தனாவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லையாம். விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமான ரஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். சுல்தான் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
அண்ணன், தம்பி
தம்பிக்கு ஜோடியாக நடித்த கையோடு அண்ணனுக்கு ஹீரோயினாகும் வாய்ப்பு ரஷ்மிகாவை தேடி வந்துள்ளது. ஆனால் சுல்தான் என்கிற தலைப்பை படக்குழு வெளியிடும் முன்பு ரஷ்மிகா உளறிவிட்டார். அதனால் படக்குழு அவர் மீது கடுப்பில் உள்ளது. மேலும் அவர் பல கோடிகளில் சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்களும் மரண கடுப்பில் உள்ளார்கள். ஹரி படத்தில் ரஷ்மிகாவா, கார்த்தி பட்டும் சூர்யா திருந்தவில்லையே என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
ஐடி ரெய்டு
ரஷ்மிகா வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரொக்கம், கணக்கில் வராத சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே ரஷ்மிகாவுக்கு ரூ. 250 கோடி சொத்துக்கள் உள்ளதாக ஒரு புரளி கிளம்பியது. ரஷ்மிகா வீட்டில் சோதனை நடக்க திரையுலக பிரபலம் ஒருவர் தான் காரணம் என்று தகவல் வெளியானது.
Source: samayam