Press "Enter" to skip to content

பிரபல இயக்குநர் மீது கொலவெறியில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம்

Samayam Tamil | Updated:

பெரிய நடிகர் ஒருவரை வைத்து படம் எடுத்த இயக்குநரின் பெயரை கேட்டாலே தயாரிப்பு நிறுவனம் ஒன்று கடுப்பாகிறதாம்.

இயக்குநர்

image

நல்ல, நல்ல படங்களை எடுத்து வந்தவர் அந்த இயக்குநர். ஒரு முறை கதை திருட்டுப் பிரச்சனையில் சிக்கி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். அதன் பிறகு அவர் தனது கனவு படத்தை இயக்கினார். அதாவது பெரிய ஹீரோ ஒருவரை வைத்து படம் எடுத்து ரிலீஸ் செய்தார். அந்த படத்தை பெரும் பணக்கார தயாரிப்பாளர் தயாரித்தார்.

வினியோகஸ்தர்கள்

image

ஹீரோ பெரிய ஆள், பெத்த பட்ஜெட், படம் செம ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் நஷ்டம் அடைந்துவிட்டதால் வினியோகஸ்தர்கள் நடிகரிடம் இழப்பீடு கேட்கிறார்கள். இன்று கூட நடிகரை சந்திக்க அவர் வீட்டிற்கு வினியோகஸ்தர்கள் செல்ல போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திவிட்டார்கள். இதற்கிடையேயும் ஒரு கும்பல் லீடர் வாழ்க, அவர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று கூவிக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பு நிறுவனம்

image

பெரிய ஹீரோவை வைத்து படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் நடிகரை விட இயக்குநர் மீது தான் கடும் கோபத்தில் உள்ளதாம். தயவு செய்து இனி நாங்கள் இருக்கும் பக்கம் கூட வந்துவிட வேண்டாம் என்று கூறி இயக்குநரை விரட்டிவிட்டுள்ளதாம். படத்தை பார்த்தவர்கள் இயக்குநரை கண்டமேனிக்கு விளாசியதும் இதற்கு ஒரு காரணம்.

புலம்பல்

image

சிறப்பான, தரமான சம்பவத்தை இயக்குநர் எங்களுக்கு தான் செய்துவிட்டார் என்று கூறி புலம்புகிறதாம் தயாரிப்பு நிறுவனம். இருப்பினும் அந்த இயக்குநர் வாரிசு நடிகரை வைத்து இயக்க உள்ள படத்தை தயாரிக்க அந்த தயாரிப்பு நிறுவனம் முன்பே ஒப்புக் கொண்டது. அதனால் அந்த படத்தை முடித்த கையோடு இந்த பக்கமே வரக் கூடாது என்று இயக்குநரிடம் தெரிவித்துள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »