பிகில் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது தெரிந்ததே. நேற்று காலை முதல் தொடங்கி இப்போது வரை தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில் இதுவரை 57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதனை அடுத்து விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததில் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது
பிகில் படத்தால் விஜய்க்கும், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும் ஆனால் அந்த லாபத்துக்கு உரிய வருமான வரியை சரியாக கட்டவில்லை என்று புகார் வந்ததாகவும் இதன் அடிப்படையில் தான் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
பிகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதால் கோலிவுட் துறைகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
The post வருமான வரி சோதனையில் ரூ.57 கோடி பறிமுதலா? திடுக்கிடும் தகவல்! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes