அயோத்தி வழக்கில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் ராமர் கோவில் கட்டுவதற்கு என ஒரு அறக்கட்டளை அமைத்து அதில் அதன்மூலம் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காகஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றி மத்திய அரசு இந்த அறக்கட்டளைக்கு முதல் முதலாக ஒரு ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளது. இந்த ஒரு ரூபாய் நன்கொடையை உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் வழங்கினார்
மேலும் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு விருப்பப்படுபவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடைகள் அளிக்கலாம் என்றும் நன்கொடைகள் பணமாக மட்டுமின்றி பொருளாகவும் அசையா சொத்துக்களையும் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
The post ராமர் கோவில் அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் கொடுத்த மத்திய அரசு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes