சேலத்தில் இன்று சர்வதேச தரத்தில் அமைந்த கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்
இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் கலந்துகொண்டார் திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்ததும் மைதானத்திற்கு அனைவரும் வந்த னர். அப்போது முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்ய, ராகுல் டிராவிட் பவுலிங் செய்ய அந்த கிரிக்கெட் மைதானம் ஒரே அதகளமாக இருந்தது
இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
The post ராகுல் டிராவிட் பந்துவீச, எடப்பாடி பழனிச்சாமி பேட்டிங் செய்ய.. ஒரே அதகளம்தான் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes