Press "Enter" to skip to content

ஆடை வடிவமைப்பாளருடன் நெருக்கம் காட்டும் ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான ஸ்ரேயா, ஆடை வடிவமைப்பாளருடன் மிகவும் நெருக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் உச்சம் தொட்டவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் தனது முதல் படமாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ஸ்ரேயா. 

கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் இவருக்கு பட வாய்ப்புக்கள் சரியாக அமையவில்லை. இதனால் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. தற்போது ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரேயா கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தார்.

அது மட்டுமல்லாமல் பிரபல ஆடை வடிவமைப்பாளருடன் ஸ்ரேயா எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காலை எடுத்து அவர் மீது வைத்து போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரேயா. இப்புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. பலரும் ஆடை வடிவமைப்பாளருடன் இவ்வளவு நெருக்கம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »