மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர். தாணு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: Malai Malar