இயக்குனர் விசுவின் மறைவுக்கு நடிகர் சரத்குமார் வீட்டில் இருந்தே கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்டவர் விசு. இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் செலுத்தினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்துவதால் பலர் இவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.
#RIPVisu. Let our prayers support the soul to connect the eternity. Considering the current situation we are unable to pay our last respect in person hence wherever we are let us pray for his peaceful departure. pic.twitter.com/vsnkPeDRNb
— R Sarath Kumar (@realsarathkumar)
இந்நிலையில், நடிகர் சரத்குமார் வீட்டிலேயே கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்துவதால் நம்மால் மற்றவர்களுக்கும், மற்றவர்களால் நமக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் அவரது இறுதி அஞ்சலியில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
Source: Malai Malar