Press "Enter" to skip to content

யுகாதியை முன்னிட்டு சிரஞ்சீவி எடுத்த திடீர் முடிவு

யுகாதி தினத்தை முன்னிட்டு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரசிகர்களுடன் உரையாட திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் பலரும் இணைந்து அவர்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். ஆனால், அஜித் போன்றவர்கள் அதில் இன்னும் வரவேயில்லை.

தெலுங்குத்திரையுலகின் மூத்த நடிகரான சிரஞ்சீவி யுகாதியை முன்னிட்டு சமூக வலைத்தளத்திற்குள் வருவதாக அறிவித்துள்ளார். இன்று புதிய கணக்குடன் ரசிகர்களுடன் உரையாடவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தனது கருத்துக்களைப் பதிவிடுவதற்காகவும் சமூக வலைத்தளத்தில் வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »