Press "Enter" to skip to content

பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்த பிரகாஷ் ராஜ்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பணியாளர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல துறைகளும் முடங்கி இருக்கிறது . இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார். 

இது குறித்து அவர் டுவிட்டரில், எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கி விட்டேன். கட்டுப்பாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும், சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது அரை சம்பளத்தைத் தர அவசியமான வழிமுறையை முடிவு செய்தேன். ஆயினும் இன்னும் முடியவில்லை. என்னால் முடிந்த வரை இன்னும் பண்ணுவேன் .

 நம்முடையே வாழ்க்கைக்கு நாம் திரும்பத் தர வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய வேளை இது என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »