Press "Enter" to skip to content

சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்

மொட்டைமாடியில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், கடந்தாண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் வைரலானது. இதன்பின் பல்வேறு பட வாய்ப்புகள் வந்தும், தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  கவனம் செலுத்தி வந்தார். அதன்முலம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகப் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »