Press "Enter" to skip to content

பெண் போலீசுக்கு உதவுங்கள் – யோகி பாபு கோரிக்கை

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு பெண் போலீசுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகை முடக்கிப்போட்டிருக்கிறது. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது. 
இந்த சூழ்நிலையில் போலீஸ், மீடியா, மருத்துவர்கள் மட்டும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் நடிகர் யோகி பாபு போலீசுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள் என்றும், பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள் என்றும் அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் நடிகர் யோகிபாபு தனது தெரிவித்துள்ளார். 

மக்களுக்காக பணி செய்யும் காவலர்களுக்கு பொதுமக்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அறிவுரையை கூறிய நடிகர் யோகிபாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »