Press "Enter" to skip to content

இறுதி கட்டத்தில் சிக்கித் தவிக்கும் நயன்தாரா திரைப்படம்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் திரைப்படம் இறுதி கட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘நெற்றிக்கண்.’ இந்தப் படத்தின் தலைப்பை நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு பெயராக சூட்டியிருக்கிறார்கள். இதில், நயன்தாரா போலீஸ் அதிகாரியாகவும், கண் பார்வையற்றவராகவும் நடிக்கிறார். 

குற்றப் பின்னணியிலான திகில் படம் இது. பார்வையற்றவரான அவர் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதே ‘நெற்றிக்கண்’ படத்தின் கதை. இதில், நயன்தாராவுடன் வில்லனாக அஜ்மல் நடிக்கிறார். இவர்களுடன் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது. 

இந்தப் படத்தை மிலிந்த் ராவ் டைரக்டு செய்கிறார். இவர், ‘அவள்’ என்ற திகில் படத்தை இயக்கியவர். நயன்தாராவின் காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பிரச்சினை தீர்ந்ததும் சென்னையிலேயே படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »