Press "Enter" to skip to content

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய உள்ளதாக நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். 

மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் (பி.பி.இ. கிட்ஸ்) வழங்கப்படும். மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். 2 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும். மேலும் மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »