Press "Enter" to skip to content

மக்களுக்கு சேவை செய்ய அரசு நடத்தும் கால் சென்டரில் பணிபுரியும் பிரபல நடிகை

பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசு நடத்தும் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார்.

சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிலா விமல். பின்னர் கிடாரி படத்திலும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்தானதால் நடிகை நிகிலா விமல் சமூக நலப்பணிகளில் இறங்கியுள்ளார்.

அந்த வகையில் ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுப்பதை ஒருங்கிணைக்க கேரள மாநிலம் கண்ணூரில் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் வேலை பார்க்க தன்னார்வலர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 

இதனை அறிந்த நடிகை நிகிலா விமல் உடனே அந்த கால் சென்டரில் சேர்ந்து வேலை பார்க்கிறார். இது போன்ற இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவ கால் சென்டரில் பணியாற்றுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார். நிகிலாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »