சாயிஷாவை திருமணம் செய்து கொண்ட ஆர்யா, தற்போது விடுமுறை நாளில் அவரது சமயலை சாப்பிட்டு புகழ்ந்து வருகிறார்.
சினிமா நடிகர், நடிகைகளிடம் இருக்கும் திறமைகளை அவர்களே மறந்துவிட்ட நிலையில் இப்போது இந்த விடுமுறை நேரத்தில் தான் அது அவர்களுக்கே நினைவுக்கு வருகிறது. பல நடிகைகள் தன் கணவருக்கும், தன் குழந்தைகளுக்கும் தங்கள் கைகளால் விதவிதமாக சமைத்து தருகின்றனர்.
அந்த வகையில் ஆர்யா, சாயிஷா ஜோடி இந்த ஊரடங்கை ஓய்வு நேரமாக நினைக்கின்றனர். சாயிஷா தன் கணவர் ஆர்யாவுக்கு தினமும் ஸ்பெஷல் உணவுகளை சமைத்து தருகிறார்.
முதலில் கப் கேக், சீஸ் கேக் என்று ஆரம்பித்து தற்போது, பிரியாணி சமைக்கும் அளவுக்கு தயாராகி விட்டார். பிரியாணி சாப்பிட்ட ஆர்யா அப்படியே அசந்து போய் விட்டு மிகவும் அருமை அருமை என்று கூறியுள்ளார். தன் மனைவி சமைத்த உணவுகளை படங்கள் எடுத்து தன் நண்பர்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ள ஆர்யா இது என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Source: Malai Malar