Press "Enter" to skip to content

விஷ்ணு விஷாலை ரத்த கறையுடன் போட்டோ எடுத்தது யார் தெரியுமா?

விஷ்ணு விஷாலை ரத்த கறையுடன் போட்டோ எடுத்தது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடித்துள்ள காடன், ஜகஜால கில்லாடி ஆகிய படங்களின் ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளன.

இதையடுத்து எப்.ஐ.ஆர். எனும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்நிலையில் இவர் அடுத்ததாக நடித்து தயாரிக்கும் மோகன் தாஸ் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார்.

சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் உடல் முழுவதும் ரத்தக்கறையுடன் விஷ்ணு விஷால் இருப்பதுபோல் அப்போஸ்டர் அமைந்துள்ளது. பலரும் அதை பாராட்டி வந்த நிலையில், அந்த போட்டோவை எடுத்தது யார் என்ற உண்மையை தற்போது விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

ஷுட்டிங்கின்போது தனது பெண் தோழியான பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தான் இந்த போட்டோவை எடுத்தது என்று அவர் கூறியுள்ளார். விளையாட்டாக எடுத்த அந்த போட்டோவை வைத்து கிரியேட்டிவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய படக்குழுவினர் அதனை டிஜிட்டல் போஸ்டராக மாற்றியுள்ளனர்.  அந்தப் அந்த போஸ்டர் இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »