Press "Enter" to skip to content

இரண்டு பேரை வைத்து படம் எடுப்பது சுமையாக இல்லை – இயக்குனர் ராஜமவுலி

இரண்டு பேரை வைத்து படம் எடுப்பது சுமையாக இல்லை என்று இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.

‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமானவர் டைரக்டர், ராஜமவுலி. இவர் இயக்கிய ‘பாகுபலி,’ ‘பாகுபலி 2’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்ததுடன், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

அந்த 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி, ‘ஆர் ஆர் ஆர்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

‘‘இரண்டு பேரும் எதிர் எதிர் நட்சத்திர குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், அதையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அதனால் இரண்டு பேரையும் இணைந்து நடிக்க வைப்பது சுமையாக இல்லை’’ என்கிறார், டைரக்டர் ராஜமவுலி.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »