Press "Enter" to skip to content

விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த லோகேஷ் கனகராஜ்

விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படம், கடந்த வாரம் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில், விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படம் எப்போது திரைக்கு வரும்? என்று ரசிகர்கள் கேள்வி விடுத்துள்ளனர். ‘‘முதலில் உயிர் பிழைப்போம்.. அப்புறம் கொண்டாடலாம்’’ என்று டைரக்டர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார். ‘‘விரைவில் படம் திரைக்கு வரும். அதுவரை பொறுத்திருங்கள்’’ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

அவரிடம், ‘‘படம் வரட்டும்.. அதை வேறு லெவலுக்கு கொண்டு போய் விடலாம்’’ என்று ரசிகர்கள் உத்தரவாதம் அளித்து இருக்கிறார்கள்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »