Press "Enter" to skip to content

தெலுங்கு படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி

தமிழில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் படம் புஷ்பா. ஐந்து மொழிகளிலும் இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இவருக்கு பதிலாக பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. 

இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »