Press "Enter" to skip to content

ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் திரிஷா

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை திரிஷா, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வந்த நடிகை திரிஷா, கேமரா முன் நிற்க முடியாமல் இருக்கும் தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

திரிஷா இந்த நேரத்தில் வெளியே போக முடியாததால், டிக் டாக் அக்கவுண்ட் தொடங்கி ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார். தனது இன்ஸ்டா பக்கத்திலும் டிக் டாக் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »