Press "Enter" to skip to content

விஜய் தானத்தளபதி என்று நிரூபித்து விட்டார் – பிரபல இயக்குனர் பாராட்டு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1.30 கோடி நிதி வழங்கி விஜய் தானத்தளபதி என்று நிரூபித்து விட்டார் என பிரபல இயக்குனர் பாராட்டியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நிதியுதவி அளித்தும் விஜய் ஏன் எதுவும் செய்யாமல் மவுனம் காத்து வருகிறார் என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிக்காக 1.30 கோடி நிதி வழங்குவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து விஜய்யின் சிவகாசி, திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கிய பேரரசு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே, மனிதர்களின் பெருங்குறை! தளபதி தானத்தளபதி என்று மீண்டும் நிரூபித்து விட்டார். திராவிடத்தை நேசிக்கும் தமிழனாய் தளபதி மிளிர்கிறார்! தளபதி விஜய்க்கு தலைவணங்கி நன்றிகள் கோடி! என கூறியுள்ளார்.

ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே,
மனிதர்களின் பெருங்குறை!
தளபதி தானத்தளபதி என்று
மீண்டும் நிரூபித்து விட்டார்.
திராவிடத்தை நேசிக்கும்
தமிழனாய் தளபதி மிளிர்கிறார்!
தளபதி விஜய்க்கு
தலைவணங்கி நன்றிகள் கோடி!🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/yMycXDMwW8

— PERARASU ARASU (@ARASUPERARASU)

April 22, 2020

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »