தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், சமந்தாவுடன் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா, திரிஷா என பல முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் அவர் இதுவரை சமந்தாவுடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இதுகுறித்து பிரபாஸிடம் சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவர் கூறியதாவது: எனக்கும் சமந்தாவிற்கும் இடையே உயரம் பிரச்சனையாக உள்ளது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றாததற்கு முக்கிய கரணம் என கூறியுள்ளார். கடந்தாண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. பின்னர் அவருக்கு பதில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்தனர்.
Source: Malai Malar