Press "Enter" to skip to content

“காவல்துறையினர் தான் ரியல் கதாநாயகன்”…. ஆட்டோகிராப் வாங்கி போலீசாரை நெகிழ வைத்த சூரி

திருவல்லிக்கேணியில் உள்ள டி 1 காவல்நிலையத்துக்கு நேரில் சென்ற நடிகர் சூரி போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி நெகிழ வைத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என அனைவரும் இரவு பகல் பாராமல் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா பரவி வருகிறது. 

கொரோனா தடுப்பு பணிகளில் சூப்பர் ஹீரோவாக செயல்படும் காவலர்களை நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சென்று பாராட்டியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டி 1 காவல்நிலையத்துக்கு சென்ற அவர் போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி நெகிழ வைத்தார். 

காவல்துறையினருடன் சூரி

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா என்கிற கொடூரமான வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து  வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு, இரவு பகல் பாராமல், தன்னுடைய குடும்பத்தை பிரிந்து, உயிரை பணயம் வைத்து காவல்துறையினர் வேலை செய்து வருகிறார்கள். நடமாடும் தெய்வமாக, காக்கி சட்டை போட்ட அய்யனாராக காவல்துறையினர் நம்மை பாதுகாத்து வருகிறார்கள். 

காவல்துறையினருடன் சூரி

இன்று காவல்துறையினரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. 50 பேருக்கு மேல் பாதித்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினர் பதறிப்போய் இருக்கிறார்கள். தன்னலமின்றி செயல்படும் இவர்கள் தான் ரியல் ஹீரோ. வழக்கமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவோம். ஆனால் எனக்கு இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கணும்னு தோணுச்சு. இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »