Press "Enter" to skip to content

நாசரின் செயலால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர்

பிரபல நடிகர் நாசரின் செயலால் கபடதாரி படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.

தற்போது அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு பரபரப்பாக செய்யத் தொடங்கியது.

சமீபத்தில் நாசர் தனது டப்பிங் பணியை ஆரம்பித்து முடித்து கொடுத்துள்ளார். அதன்பின் கொரானாவால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை விட்டுக் கொடுத்து தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

நாசரின் இந்த செயலுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »