தமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் இலியானா மக்களை தவிர்ப்பதாக கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை இலியானா. விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.
இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது நீருக்குள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மக்களை தவிர்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால் இப்படி கூறியுள்ளார் இலியானா.
Source: Malai Malar