Press "Enter" to skip to content

கொரோனா சோதனை ரிசல்ட்டை வெளியிட்ட பிருத்விராஜ்

ஜோர்டான் சென்று விட்டு திரும்பிய நடிகர் பிருத்விராஜ் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் பிருத்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை.

அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது. பின்னர், ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த விமானத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் 58 பேரும் டெல்லி திரும்பி, அங்கிருந்து கொச்சி வந்து சேர்ந்தார்கள்.

கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என முடிவு வந்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்த பிறகே வீட்டுக்குத் திரும்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »