Press "Enter" to skip to content

பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?

பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற ஹிட் படங்களை கொடுத்த சசி அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சசி. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன் என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஹரீஷ் கல்யாணை வைத்து படம் இயக்கி வருகிறார் சசி.

இந்நிலையில், சசி அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரீஷ் கல்யாண் படத்தை இயக்கி முடித்தபின், அவர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி கைவசம் யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ ரணசிங்கம், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் உள்ளன.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »