Press "Enter" to skip to content

திரைப்படமாகும் அயோத்தி வழக்கு…. கங்கனா ரனாவத் இயக்குகிறார்

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தை நடிகை கங்கனா ரனாவத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

முதல் படத்துக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த அயோத்தியா ராமர் கோயில் வழக்கு பற்றிய படம் இது. இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி உள்ளார்.

இப்படத்தை கங்கனா தான் இயக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் அவர் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே `மணிகர்ணிகா – ஜான்சியின் ராணி’ படத்தை ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடியுடன் இணைந்து இயக்கியதோடு, அப்படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »