Press "Enter" to skip to content

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை…. பாடல் மூலம் நிறவெறிக்கு எதிராக குரல்கொடுத்த வைரமுத்து

அமெரிக்காவில் நிறவெறியால் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிறவெறியால் நடந்த இந்த படுகொலைக்கு எதிராக இந்திய திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து நிறவெறிக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி உள்ளார். இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி என்பவர் இசையமைத்துள்ளார். 

பாடலில் வைரமுத்து எழுதியுள்ள வரிகள் பின்வருமாறு: “காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை என்னால் மூச்சு விட முடியவில்லை. என் காற்றின் கழுத்தில் யார் கால் வைத்து அழுத்துவது, சுவாசக்குழாயில் யார் சுவர் ஒன்றை எழுப்புவது, காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளைஎன்னால் மூச்சுவிட முடியவில்லை. 

நீங்கள் பகல் நாங்கள் இரவு
இரண்டும் இல்லையேல் காலமே இல்லை.

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை#ICantBreathe#BlackLivesMatterhttps://t.co/suYhtqg7bs

— வைரமுத்து (@Vairamuthu)

June 10, 2020

எத்தனை காலம் விலங்குகள் இறுகும்? எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்? ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா? தோலைப் பார்த்துக் காற்று வீசுமா? காக்கையும் உயிரினம் கருமையும் ஒரு நிறம் எல்லா மனிதரும் ஒரே தரம் எண்ணிப்பாரு ஒரு தரம். மாளிகை நிறத்தை மாற்றுங்கள் ஒரு பாதியில் கறுப்பை தீட்டுங்கள். நீங்கள் பகல் நாங்கள் இரவு, இரண்டும் இல்லையேல் காலமே இல்லை. காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை என்னால் மூச்சு விட முடியவில்லை” இவ்வாறு வைரமுத்து எழுதி உள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »