Press "Enter" to skip to content

கொரோனாவில் இருந்து விரைவாக குணமடைந்தது எப்படி? – விஷால் விளக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷால் அதிலிருந்து விரைவாக குணமடைந்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  உள்ளனர். அந்தவகையில் விஷாலும், அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை தான். தமக்கும் அதிக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டது. எனது மேலாளருக்கும் இதே நிலை தான் இருந்தது.

மூவரும் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொண்டதால், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டோம்.  தற்போது நலமாக உள்ளோம். மேலும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Yes it’s True, my Dad was tested Positive, by helping him I had the same symptoms of High Temperature, Cold, Cough & was the same for my Manager.

All of us took Ayurvedic Medicine & were out of Danger in a week’s time. We are now Hale & Healthy.

Happy to Share this….GB

— Vishal (@VishalKOfficial)

July 25, 2020

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »