Press "Enter" to skip to content

பிரபல பாடகியுடன் அனிருத் காதல்?

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் மாஸ்டர், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், சியான் 60 போன்ற படங்கள் உள்ளன.

இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் கூட ஜோனிடா காந்தியும், அனிருத்தும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக சேர்ந்து பாடிய ‘செல்லம்மா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

பாடகி ஜோனிடா, டெல்லியில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர். யூடியூப் மூலம் பிரபலமான ஜோனிடா காந்தி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கினார். அவரை ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெறும் மெண்டல் மனதில் பாடல்மூலம், ஏ.ஆர்.ரகுமான் தான் தமிழில் அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சுச்சீ லீக்ஸ் பரபரப்பாக இருந்தபோது அனிருத், ஆண்ட்ரியா முத்தம் கொடுத்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவை மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறப்பட்டது. அதன் பிறகு எந்தவித காதல் சர்ச்சையிலும் அனிருத் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது பாடகி ஜோனிடாவை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »