Press "Enter" to skip to content

குட் நியூஸ் சொன்ன வடிவேலு…. உற்சாகத்தில் ரசிகர்கள்

சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ஒரு குட் நியூஸ் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 12ந் தேதி என்னுடைய பிறந்தநாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைப்பதால் தினமும் பிறந்துக்கிட்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்து கொண்டு தான் இருக்கேன். என்னை பெற்ற அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். 

அன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள் 🙏❤️

விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். pic.twitter.com/NBUVNSNJim

— Actor Vadivelu (@VadiveluOffl)

September 13, 2020

இவ்வளவுக்கும் மக்கள் சக்தி தான் காரணம். மக்கள் சக்தி இல்லைனா இந்த வடிவேலுவே கிடையாது. என் அம்மாவுக்கு பிறகு மக்கள் தான். மக்களால் தான் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னொரு கேள்வி கூட நீங்க கேட்கலாம். ஏன் இன்னும் நடிக்காம இருக்காருன்னு. 

சீக்கிரமே, மிகப்பெரிய, அருமையான எண்ட்ரியுடன் வருவேன். வாழ்க்கைனா எங்கிருந்தாலும் சைத்தான், சகுனின்னு இருக்கத் தான் செய்யும். அது எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு. அது என் வாழ்க்கையில் இல்லாம இருக்குமா. அங்கங்க இரண்டு இருக்கத் தான் செய்யும் என கூறி உள்ளார். சீக்கிரமே வருவேன் என வடிவேலு கூறியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »