Press "Enter" to skip to content

லாக்டவுனில் குண்டான நாயகன்…. படப்பிடிப்பு போக முடியாமல் தவிக்கும் படக்குழு

லாக்டவுனில் ஹீரோ குண்டானதால், அவர் மீண்டும் உடல் எடையை குறைக்கும் வரை படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம்.

தமிழ் பட உலகில் நீண்ட காலத்துக்குப்பின், முக்கோண காதல் கதையை கொண்டு தயாராகும் படம்‘காகிதப்பூக்கள்’. கதாநாயகனாக லோகன் அறிமுகமாகிறார். இன்னொரு கதாநாயகனாக பிரவீன்குமார் நடிக்கிறார். கதாநாயகி, பிரியதர்சினி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் முத்து மாணிக்கம்.

முதல்கட்ட படப்பிடிப்பு பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்குள் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், சுமார் 5 மாதங்களாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தும் ‘காகிதப்பூக்கள்’ படக்குழுவால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். 

காரணம் படத்தின் நாயகன் லோகன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் குண்டாகி விட்டாராம். அவர், பத்தே நாளில் உடல் எடையை குறைப்பதாக கூறியதை தொடர்ந்து, படப்பிடிப்பை வரும், 15ம் தேதி துவக்க திட்டமிட்டுள்ளார்களாம். அடுத்தகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறதாம்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »