Press "Enter" to skip to content

கலைத்துறையில் அரசியல் தலையீடு, எதிர்ப்புகள் முறையற்றது- சரத்குமார்

கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’ திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘800’ திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

* காந்தி படத்தை விரும்பி ரசித்ததை போலத்தான் ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசித்தனர்.

* கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது.

* ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக்கூடாதே தவிர சாதனையாளரின் சரித்திரத்தை அறிவதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »